sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் ஆபத்து

/

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் ஆபத்து

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் ஆபத்து

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் ஆபத்து


ADDED : ஆக 20, 2024 10:25 PM

Google News

ADDED : ஆக 20, 2024 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளான, செங்கல்பட்டு- - காஞ்சிபுரம் சாலை, செங்கல்பட்டு - திருப்போரூர் சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில், பல கனரக வாகனங்கள் அதிக அளவில் பாரம் ஏற்றிச் செல்வதால், சக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், அதிக அளவில் கல் குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த லாரிகளில் பெரும்பாலானவை, அதிவேகத்திலும், அதிக பாரத்துடன் செல்வதால், பிற வாகன ஓட்டிகள் அச்ச உணர்வுடன் பயணிக்கின்றனர்.

கடந்த வாரம், இந்த சாலையில் இரவு நேரங்களில், கனரக வாகனங்களால் நடந்த இரு வேறு விபத்துக்களில், இருவர் உயிரிழந்தனர்.

எனவே, அதிக பாடம் ஏற்றிச்செல்லும் கல்குவாரி வாகனங்கள் மீது, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us