sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் கைவிடக்கோரி மனு அளிக்க முடிவு

/

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் கைவிடக்கோரி மனு அளிக்க முடிவு

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் கைவிடக்கோரி மனு அளிக்க முடிவு

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் கைவிடக்கோரி மனு அளிக்க முடிவு


ADDED : ஜூலை 09, 2024 10:53 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கோவளம் பகுதிக்கு, 25 ஆண்டுகளாக தையூர் ஊராட்சியில் இருந்து, இரண்டு கிணறுகள்வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கடந்தாண்டு 'ஜல் ஜீவன் மிஷன்' கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, தையூர் பகுதியில் மீண்டும் இரு கிணறுகள் தோண்டி, அங்கிருந்து கோவளம்பகுதிக்கு குடிநீர் வழங்க பணிகள் துவக்கப்பட்டன.

இதற்கு, தையூர் பகுதிவாசிகள் ஏரியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை அடுத்து, கிணறு தோண்டும் பணி கைவிடப் பட்டது.

பின், கேளம்பாக்கம்ஊராட்சியில் உள்ள வண்ணான் ஏரியில், இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து,ஏரியில் இயந்திரங்கள்வாயிலாக மண் மற்றும் நீர் பரிசோதனை பணி மேற்கொண்டனர். இதற்கும் அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கடந்த ஜூன்26ம் தேதி, சப்-கலெக்டர் நாராயண சர்மா தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால், அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின், கடந்த 2ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டம் நடந்தது.

இதில், கேளம்பாக்கம் ஊராட்சி சார்ந்த பொதுமக்கள் குறைவாக பங்கெடுத்ததால், மீண்டும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, வரும் 13ம் தேதி மாலை 3:00 மணிக்கு, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கூட்டத்தை நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கேளம்பாக்கம் ஊராட்சி சார்ந்த மக்கள் சார்பில், இத்திட்டம் சம்பந்தமாக கலந்தாலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

இதில், ஊராட்சியைச் சார்ந்த கிராம மக்கள்பங்கேற்று, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக, இத்திட்டத்தை கைவிடக் கோரி ஆலோசிக்கப்பட்டது.

அதோடு, இந்த ஊராட்சியில், வரும் 11ம் தேதி நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் அமைச்சர், கலெக்டரிடம் மனு அளிப்பது குறித்தும், மேலும் 13ம் தேதிநடைபெறும் அமைதிகூட்டத்தில் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us