sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு புது சைக்கிள் வழங்க முடிவு

/

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு புது சைக்கிள் வழங்க முடிவு

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு புது சைக்கிள் வழங்க முடிவு

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு புது சைக்கிள் வழங்க முடிவு


ADDED : மார் 14, 2025 01:09 AM

Google News

ADDED : மார் 14, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு அடுத்த மலையடி வேண்பாக்கம் பகுதியில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது.

இந்நிலையத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும், இலவச சைக்கிள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, 410 மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதனால், தொழிற்பயிற்சி வளாகத்தில், சைக்கிள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணி முடிந்தவுடன், சைக்கிள்கள் அனைத்தும் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வளாகத்தில் திறந்த வெளியில், புதிய சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெயில் மற்றும் மழையில் பாதிக்கப்படுகின்றன.

எனவே, புதிய சைக்கிகள் அனைத்தையும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us