sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்


ADDED : ஜூலை 11, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தில், புல எண்: 157ல் 2.84 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. இக்குளத்திற்கு சொந்தமான இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வீடு, கடை மற்றும் சுற்றுச்சுவர்கட்டினர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி, ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, இம்மாதம் 18ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நேற்று வருவாய்த் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் இணைந்து, செய்யூர்வட்டாட்சியர் சரவணன் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன்,பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதன் மதிப்பு 1.5 கோடி ரூபாய்.






      Dinamalar
      Follow us