sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருமண விண்ணப்ப பதிவிற்கு கோவிலில் குவியும் பக்தர்கள்

/

திருமண விண்ணப்ப பதிவிற்கு கோவிலில் குவியும் பக்தர்கள்

திருமண விண்ணப்ப பதிவிற்கு கோவிலில் குவியும் பக்தர்கள்

திருமண விண்ணப்ப பதிவிற்கு கோவிலில் குவியும் பக்தர்கள்


ADDED : ஆக 19, 2024 12:10 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில் கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதுதவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.

இங்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் திருமணம் செய்ய வேண்டுதல் இருப்பதாலும், போக்குவரத்து வசதி இருப்பதாலும், திருப்போரூர் பகுதியில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும், கோவில் சார்பில் 2.36 கோடி ரூபாயில் திருமண மண்டபம், 50 லட்சம் ரூபாயில் பக்தர்கள் தங்கும் விடுதி; 49.80 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூடம், 500 பேர் அமரும் வகையில், 6.36 கோடி ரூபாய்க்கு திருமண மண்டபம் கட்ட 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்போரூர் மற்றும் கோவில் மாட வீதிகளை சுற்றி 20க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன.

இதனால், இப்பகுதியில் முகூர்த்த நாட்களில், ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. சில சமயம் ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன.

இந்நிலையில், கோவிலில் திருமணம் நடத்துவதற்கான பணிகளில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு விண்ணப்ப படிவம் பெற்று செல்வதற்காகவும், முன்பதிவு செய்வதற்காகவும் மற்றும் விபரங்களை கேட்பதற்காவும் ஏராளமான பக்தர்கள் தினமும் கோவில் அலுவலகத்திற்கு வருகின்றனர்.

திருமண பதிவிற்கான வழிமுறைகள்

மணமக்கள் மற்றும் பெற்றோர் ஹிந்துவாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும். திருமண பதிவுக்கு 2,000 ரூபாய், விண்ணப்ப படிவம் 100 ரூபாய், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க 150 ரூபாய் செலுத்த வேண்டும்.விண்ணப்ப படிவம் பெறும்போது பள்ளி சான்றிதழ் அல்லது பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை அசல், நகல் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது மணமக்கள் மற்றும் பெற்றோர் கண்டிப்பாக வர வேண்டும்.'இ - -சேவை' மையத்தில் திருமணமாகவில்லை என்ற சான்றிதழ், குடும்ப புகைப்படம், மணமக்களின் மூன்று சிறிய அளவு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us