sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாழடைந்த சமுதாய நலக்கூடம் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

/

பாழடைந்த சமுதாய நலக்கூடம் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

பாழடைந்த சமுதாய நலக்கூடம் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

பாழடைந்த சமுதாய நலக்கூடம் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்


ADDED : ஆக 03, 2024 10:54 PM

Google News

ADDED : ஆக 03, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட, ஆறாவது வார்டு, காந்திநகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் தேவைக்காக, மதுராந்தகம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2007 -- 08ம் ஆண்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.

இதனால், அப்பகுதிவாசிகள் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி, வர்ண பூச்சு பொலிவின்றி, பாழடைந்து வருகிறது.

இதனால், மதுராந்தகம், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால், பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, பயன்பாடின்றி பாழடைந்துள்ள சமுதாய நலக்கூடத்தை, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us