/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
/
மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 06, 2024 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை, யு.டி.ஐ.டி., நகல் ஆகியவற்றுடன், கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.