sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமித்துள்ள ஷேர் ஆட்டோக்களால் இடையூறு

/

பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமித்துள்ள ஷேர் ஆட்டோக்களால் இடையூறு

பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமித்துள்ள ஷேர் ஆட்டோக்களால் இடையூறு

பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமித்துள்ள ஷேர் ஆட்டோக்களால் இடையூறு


ADDED : ஜூலை 10, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் முன், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக செங்கல்பட்டு வரை செல்லும் மாநகர பேருந்துகள் நின்று செல்கின்றன.

தேபோல், அரசு மற்றும் தனியார் தொலைதுார பேருந்துகளும், இங்கு நின்று, பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.

ஆனால், இந்த நிறுத்தத்தின் முன் இடைவெளி விடாமல், ஷேர் ஆட்டோக்கள் அணிவகுத்து நிறுத்தப்படுவதால், இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், நிற்கக்கூட இடமின்றி தவிக்கின்றனர்.

அது மட்டுமின்றி, நிறுத்தத்திற்கு வரும் பேருந்துகளும், நிற்க இடமின்றி, சாலையிலேயே நின்று பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.

இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:

ஊரப்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம், தைலாவரம், மறைமலை நகர் வரை ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

இதில், கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில், ஷேர் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தப்படுகின்றன. அதனால், பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பேருந்துகளுக்கும், அங்கு நிற்கும் பயணியருக்கும் இடையூறாக உள்ளது.

மேலும், சர்வீஸ் சாலையை பயன்படுத்தி செல்லும் வாகன ஓட்டிகளும், சிரமம் அடைகின்றனர்.

எனவே, பேருந்து நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்த தடை விதிக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us