sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தி.மு.க.,வினர் ஒழிக கோஷம் பா.ஜ.,வினர் கொதிப்பு

/

தி.மு.க.,வினர் ஒழிக கோஷம் பா.ஜ.,வினர் கொதிப்பு

தி.மு.க.,வினர் ஒழிக கோஷம் பா.ஜ.,வினர் கொதிப்பு

தி.மு.க.,வினர் ஒழிக கோஷம் பா.ஜ.,வினர் கொதிப்பு


ADDED : செப் 01, 2024 01:19 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:எழும்பூர் -- நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை நேற்று துவங்கியது.

தாம்பரம் ரயில் நிலையத்தில், இந்த ரயிலை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., டி.ஆர்.பாலு தலைமையில், 500க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

அதேபோல், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில், 500க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரும் கலந்து கொண்டனர்.

தாம்பரத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்த போது, தி.மு.க.,வினர் மற்றும் பா.ஜ., வினர் மாறி மாறி கோஷங்கள் எழுப்பி ரயிலை வரவேற்றனர். அப்போது, பா.ஜ.,வினர், 'மோடி வாழ்க' என கோஷங்கள் எழுப்பினர். அதற்கு பதிலடியாக தி.மு.க.,வினர், 'மோடி ஒழிக' என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ரயிலில் பா.ஜ.,வை சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி வந்தார். ஒழிக கோஷங்களால் அவர் ஆவேசம் அடைந்தார்.

பா.ஜ.,வினர் மத்தியில் பேசிய அவர், ''தி.மு.க., வினருக்கு நாகரிகம் தெரியாததால் தான், மோடி ஒழிக என கோஷம் எழுப்பினர்.

''தமிழகத்திற்கு, மோடி பல்வேறு நல்ல திட்டங்களை கொடுத்தள்ளார். இப்போது, இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடுத்துள்ளார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us