sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நண்பரிடம் செயின் திருடிய போதை வாலிபர் கைது

/

நண்பரிடம் செயின் திருடிய போதை வாலிபர் கைது

நண்பரிடம் செயின் திருடிய போதை வாலிபர் கைது

நண்பரிடம் செயின் திருடிய போதை வாலிபர் கைது


ADDED : மே 13, 2024 05:57 AM

Google News

ADDED : மே 13, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிப்புண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவலு, 30. நேற்று முன்தினம், செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில், தன் நண்பர் விமல்ராஜ் உடன் மது அருந்தி உள்ளார்.

மது போதையில் கேசவலு மயங்கி உள்ளார். போதை தெளிந்து பார்த்த போது, கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் தங்க நகை திருடு போயிருந்தது.

அதோடு, உடன் குடித்த விமல்ராஜ் மாயமாகி இருந்தார். இது குறித்து, கேசவலு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, செட்டிப்புண்ணியம் பகுதியை சேர்ந்த விமல்ராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு, அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விமல்ராஜ் மீது, ஏற்கனவே பாலுார் காவல் நிலையத்தில் வழிப்பறி, மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us