/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு பஜார் பகுதியில் வடிகால் அமைக்க எதிர்பார்ப்பு
/
சூணாம்பேடு பஜார் பகுதியில் வடிகால் அமைக்க எதிர்பார்ப்பு
சூணாம்பேடு பஜார் பகுதியில் வடிகால் அமைக்க எதிர்பார்ப்பு
சூணாம்பேடு பஜார் பகுதியில் வடிகால் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 03, 2024 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சியின் மையப்பகுதியில் பஜார் உள்ளது.
இங்கு மழை நீர் வடிகால்வாய் இல்லாததால், மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், ஆங்காங்கே குட்டையாக தேங்குவதால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
நாளுக்கு நாள் கட்டடங்களின் எண்ணிகை பெருகி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பஜார் பகுதியில் மழை நீர் வடிகால்வாய் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.