/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாய்களுக்கு உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு
/
நாய்களுக்கு உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 13, 2024 12:38 AM
தாம்பரம்:வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு, அதன் உரிமையாளர்கள், அவசியம் உரிமம் பெற வேண்டும் என, தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியது.
நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, https://tcmcpublichealth.in என்ற புதிய இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியது.
இதன் வாயிலாக இதுவரை, 732 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றை சரிபார்த்து, முதல் கட்டமாக, 503 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க, ஆக., 15ம் தேதி வரை கால அவகாசம்நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆக., 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் உரிமையாளர்களிடம் இருந்து, செல்லப் பிராணிஒன்றுக்கு, கால தாமத கட்டணமாக, 250 ரூபாய் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆக., 15க்குள் விண்ணப்பித்து உரிமம் பெறும்படி, மாநகராட்சி தெரிவித்துள்ளது.