/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாயிகள் அச்சம்
/
வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாயிகள் அச்சம்
வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாயிகள் அச்சம்
வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாயிகள் அச்சம்
ADDED : ஏப் 16, 2024 06:27 AM

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் ஊராட்சியில் அனுமந்தபுரம், தர்காஸ், தாசரிகுப்பம், சந்தகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழில்.
இக்கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் மற்றும் புடலங்காய், கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மின்கம்பிகள் செல்கின்றன.
இந்த மின் கம்பிகள் பல இடங்களில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதன் காரணமாக, வயலுக்கு செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. உழவுப்பணிகள் டிராக்டர் மூலம் மேற்கொள்ளும் போது, மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால் பணிகளில் தடை ஏற்படுகிறது.
அதேபோல, அறுவடை காலங்களில், இயந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் மேற்கொள்ளும் போது, தனியாக ஆட்கள் வைத்து மரக் கிளைகள் மூலம் மின் கம்பிகளை உயர்த்தி வழி ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.
எனவே, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

