sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பரிதாப நிலையில் தடுப்பணை தூர்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

பரிதாப நிலையில் தடுப்பணை தூர்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு

பரிதாப நிலையில் தடுப்பணை தூர்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு

பரிதாப நிலையில் தடுப்பணை தூர்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 15, 2024 05:52 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர் : சித்தாமூர் அருகே மதுராபுதுார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயமே கிராமத்தின் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 2014ம் ஆண்டு ஏரி உபரிநீர் கால்வாயில், 8 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது.

இதனால் ,தடுப்பணையில் தண்ணீர் தேங்கி, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது. முறையான பராமரிப்பு இன்றி தடுப்பணை நாளடைவில் பழுதடைந்ததால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் வீணாகி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us