/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் உலர்த்தும் களம் இல்லாமல் வெடால் விவசாயிகள் அவதி
/
நெல் உலர்த்தும் களம் இல்லாமல் வெடால் விவசாயிகள் அவதி
நெல் உலர்த்தும் களம் இல்லாமல் வெடால் விவசாயிகள் அவதி
நெல் உலர்த்தும் களம் இல்லாமல் வெடால் விவசாயிகள் அவதி
ADDED : மார் 09, 2025 11:39 PM

செய்யூர் செய்யூர் அருகே வெடால் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏரி, கிணறு போன்ற நீர்பாசனம் வாயிலாக 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல்,வேர்க்கடலை,கேழ்வரகு ,உளுந்து போன்றவை பயிரிடப்படுகிறது.
விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.
அதிக படியாக நெல் விவசாயம் செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் நெல், வேர்க்கடலை, கேழ்வரகு, உளுந்து போன்றவற்றை உலர்த்த களம் வசதி இல்லாததால் நல்லுார்- வில்லிப்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில் கொட்டி விவசாயிகள் உலர்த்தி வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறோம்.
அறுவடை செய்யப்படும் பயிர்களை உலர்த்துவதற்கு களம் இல்லாததால் சாலையில் உலர்த்தி வருகிறோம்.
சாலையில் பயிர்களை கொட்டி உலர்த்துவதால் வாகனங்களின் சக்கரத்தில் சிக்கி பயிர்கள் வீணாகின்றன.
நெற்களம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நெற்களம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.