sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிவு ஆயில் கசிவால் தீ விபத்து பழைய பொருள் கிடங்கு தீக்கிரை

/

கழிவு ஆயில் கசிவால் தீ விபத்து பழைய பொருள் கிடங்கு தீக்கிரை

கழிவு ஆயில் கசிவால் தீ விபத்து பழைய பொருள் கிடங்கு தீக்கிரை

கழிவு ஆயில் கசிவால் தீ விபத்து பழைய பொருள் கிடங்கு தீக்கிரை


ADDED : மே 02, 2024 01:23 AM

Google News

ADDED : மே 02, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:புழல் அடுத்த சூரப்பட்டு- - அம்பத்துார் அணுகு சாலை, ஓம் சக்தி நகரில் அம்பத்துாரைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கு உள்ளது.

தகடு ஷீட்களான அந்த கிடங்கில், பழுதான பழைய பிரிட்ஜ், வாஷிங் மிஷின், 'ஏசி' மற்றும் வாகனம், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு, 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பேரல்களில் அடைக்கப்பட்ட கழிவு ஆயில் ஆகியவை இருந்தன.

இந்த நிலையில், நேற்று மதியம் 1:30 மணி அளவில், பழுதான பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ஆகியவற்றை, 'காஸ்' கட்டிங் மூலம் வெட்டி எடுக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதில் இருந்த தீப்பொறி பேரலில் இருந்து கசிந்த கழிவு ஆயிலில் பட்டு, அந்த பேரல் தீப்பற்றி எரிந்தது. சற்று நேரத்தில் மளமளவென பரவிய தீ, கிடங்கின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவின. அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடி உயிர் தப்பினர்.

அங்கிருந்து வெளியேறிய அடர்த்தியான கரும்புகையால் பகுதிவாசிகள் கண் எரிச்சல், மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். அந்த கிடங்கிற்கு அருகில் பஞ்சு மெத்தை, தலையணை தயாரிக்கும் கிடங்கு, பழைய பிளாஸ்டிக், பேப்பர் வாங்கி விற்கும் கடை, கார் பழுது நீக்கும் கடை ஆகியவை உள்ளன. அவற்றிலும் தீ பிடித்து, அங்குள்ள பொருட்கள் எரிந்தன. அதில், தலா இரண்டு கார், வேன் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் தீக்கிரையாகின.

அம்பத்துார், மாதவரம், செங்குன்றம், கொளத்துார், வில்லிவாக்கம், வ.உ.சி., நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து, வீரர்கள் வந்து, தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட குடிநீரும் தீயணைப்பிற்காக பயன்படுத்தப்பட்டன. இதனால், மாலை 5:00 மணி அளவில் ஒருவழியாக தீ அணைக்கப்பட்டது.

விபத்து குறித்து அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

எச்சரித்த 'தினமலர்' நாளிதழ்


சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்துார், ஆவடி, திருவேற்காடு, புழல், மாதவரம், வடபெரும்பாக்கம், செங்குன்றம், சோழவரம், காரனோடை சுற்றுவட்டாரங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகள் உள்ளன. ஆனால், பல இடங்களில் நெறிமுறைகள் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து, கடந்த 26ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதில், முறையான தொழில் அனுமதி பெறாமலும், பாதுகாப்பு அம்சங்கள் இன்றியும் செயல்படும் கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும். அதற்காக, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், போலீஸ், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினரின் நேரடி ஆய்வு, கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியது. சரியான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே, தொடர்கதையாகும் தீ விபத்துகளுக்கு முடிவு கட்ட முடியும்.








      Dinamalar
      Follow us