ADDED : செப் 09, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 57; மீனவர். நேற்று முன்தினம் இரவு, ஈசாணி மூர்த்தி கோவில் தெருவில் இருந்து, திருவொற்றியூர் குப்பம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
திருவொற்றியூர் குப்பம் அருகே, எண்ணுார் விரைவு சாலையை கடந்த போது, எண்ணுாரில் இருந்து ராயபுரம் நோக்கி, அதிவேகமாக சென்ற கருப்பு வண்ண கார் ஒன்று, கன்னியப்பன் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது.
இதில், கன்னியப்பனுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.