sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கால்நடை வளர்ப்போருக்கு தீவன மேலாண்மை பயிற்சி

/

கால்நடை வளர்ப்போருக்கு தீவன மேலாண்மை பயிற்சி

கால்நடை வளர்ப்போருக்கு தீவன மேலாண்மை பயிற்சி

கால்நடை வளர்ப்போருக்கு தீவன மேலாண்மை பயிற்சி


ADDED : ஜூன் 28, 2024 11:04 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆடுகளுக்கான தீவன மேலாண்மை குறித்து, ஆடு வளர்ப்போருக்கு ஒரு நாள் பயிற்சி நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது.

வேளாண் அறிவியல் நிலைய கால்நடை துறை உதவி பேராசிரியை அபர்ணா, இந்த பயிற்சியை நடத்தினார். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்களுக்கு, ஆடுகளுக்கான ஊட்டச்சத்து தீவனத்தின் தேவைகள், சுழற்சிமுறை மேய்த்தல் மற்றும் அதன் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டது.

ஆடுகளுக்கு கோடை மற்றும் வறட்சி காலங்களில் தீவனம் அளிக்கும் முறை, பசுந்தீவனத்தை பதப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், அடர் தீவனம் மற்றும் தாது உப்புக்களின் முக்கியத்துவம், பால் மாற்று பொருளின் அவசியம், ஆடுகளுக்கான தானுவாஸ் தாது உப்புக் கலவை குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

அசோலா மற்றும் ஹைட்ரோ போனிக் விவசாயம் குறித்தும், மரபு சார்ந்த தீவனங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

தொடர்ந்து, வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள தீவன பண்ணையில், அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு குறித்து, நேரடியாக விளக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us