/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு அலுவலகங்களில் முந்தைய கலெக்டர் பெயர்
/
அரசு அலுவலகங்களில் முந்தைய கலெக்டர் பெயர்
ADDED : ஜூன் 30, 2024 10:56 PM
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக தகவல் பலகையில், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் பெயர், முன்பு பணியாற்றியவர்களின் பெயர்களே நீடிக்கிறது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக, கடந்த ஜன., முதல் அருண்ராஜ் உள்ளார். மாவட்ட வருவாய் அலுவலராக, கடந்தாண்டு ஜூன் மாதம் முதல், சுபா நந்தினி பதவி வகிக்கிறார். அதற்கு முந்தைய கலெக்டராக ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலராக மேனுவல்ராஜ் பதவி வகித்தனர்.
இந்நிலையில், திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில், வருவாய்த்துறையின் பல்வேறு சேவைகள் குறித்த தகவல் பலகையில், புதிய அலுவலர்களின் பெயர்கள் இடம்பெறாமல், முந்தைய அலுவலர்களின் பெயர்களே, தற்போதும் நீடிக்கிறது.
எனவே, புதிய அலுவலர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.