/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நகராட்சி பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
/
நகராட்சி பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 13, 2024 05:46 PM

கூடுவாஞ்சேரி:
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், குப்பை சேகரிக்கும் பண்யில் 200க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கென பிரத்யேகமாக, இலவச பொது மருத்துவ முகாம் நடத்துவதற்கான முயற்சியில், நகராட்சி கமிஷனர் தாமோதரன், நகராட்சி சுகாதார அலுவலர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், நகராட்சி அலுவலக வளாகத்தில், நேற்று காலை இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
அதில், துாய்மை பணியாளர்களுக்கு, ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கண், இதயம் போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கும், இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.