sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சுதந்திர போராட்ட அருங்காட்சியகம் அரசு வேண்டுகோள்

/

சுதந்திர போராட்ட அருங்காட்சியகம் அரசு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட அருங்காட்சியகம் அரசு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட அருங்காட்சியகம் அரசு வேண்டுகோள்


ADDED : ஏப் 28, 2024 06:35 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : 'சென்னையில் அமைய உள்ள அருங்காட்சியகத்திற்கு, பொது மக்கள் தங்களிடம் உள்ள, சுதந்திரப் போராட்டம் தொடர்பான பொருட்களை நன்கொடையாக வழங்க வேண்டும்' என, அருங்காட்சியகங்கள் துறை கமிஷனர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை, மெரினா கடற்கரை எதிரில், பாரம்பரிய கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில், 80,000 சதுர அடி பரப்பளவில், அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இது சிறப்பாக அமைய, அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பு தேவை.

எனவே, பொது மக்கள் தங்கள் வசம் உள்ள, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், ராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ., சீருடைகள், ஐ.என்.ஏ., அஞ்சல் தலை, ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை, நன்கொடையாக அளிக்கலாம்.

தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை, சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரடியாக சென்று வழங்கலாம்.

இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு, உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அரியப் பொருட்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்போது, அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us