/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரும் 19 முதல் செப்., 6 வரை தொழில் துவங்க கடன் மேளா
/
வரும் 19 முதல் செப்., 6 வரை தொழில் துவங்க கடன் மேளா
வரும் 19 முதல் செப்., 6 வரை தொழில் துவங்க கடன் மேளா
வரும் 19 முதல் செப்., 6 வரை தொழில் துவங்க கடன் மேளா
ADDED : ஆக 16, 2024 10:23 PM
செங்கல்பட்டு:மறைமலை நகரில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா, வரும் 17ம் தேதி துவங்கி, செப்., 6ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டுவரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம். இக்கழகம், மாநில அரசின் ஆதரவுடன், இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி, தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு, புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும், பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் எம்.ஜி.ஆர்., சாலையில் உள்ள மறைமலை நகர் கிளை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா, வரும் 19ம் தேதி துவங்கி, வரும் செப்., 6ம் தேதி வரை நடக்கிறது.
இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில், டி.ஐ.ஐ.சி.,யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகின்றன.
தகுதி பெறும் தொழில்களுக்கு, தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டில் மானியமாக, 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும். இந்த முகாமில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு, செயலாக்கக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, மொபைல் எண்கள்: 94450 23488, 78455 29657, 96001 30247, 94450 23494 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.