/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 13, 2024 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 19ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், வரும் 19ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, எரிவாயு வினியோகம் குறித்தான தங்களை குறைகளை நிவர்த்திசெய்து பயன்பெறலம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.