/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீழாமூர் பழனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
/
கீழாமூர் பழனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : ஜூன் 25, 2024 06:56 AM

மதுராந்தகம், : மதுராந்தகம் அருகே கீழாமூர் கிராமத்தில் உள்ள கிராம தேவதையான பழனியம்மன் தேர் திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது. இன்று வசந்த உற்சவம் நடக்கிறது.
மதுராந்தகம் அருகே கீழாமூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை பழனியம்மன் அழைப்பு, கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
வரும் 18ல், கங்கையம்மன் பூங்கரகம் திருவீதி உலா வருதல் மற்றும் மதியம் 1:00 மணிக்கு கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு தெய்வீக நாடகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, 19-ல் பழனியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் சுவாமி திருவீதி உலா வருதல், அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் திருவீதி உலா நடந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம், பழனியம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது.
தேரில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்த பழனியம்மனை, வீடுகள்தோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
இன்று, பழனியம்மன் வசந்த உற்சவம் நடக்கிறது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.