/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒளிரும் தோட்ட பணி: பூங்கா அழிப்பு
/
ஒளிரும் தோட்ட பணி: பூங்கா அழிப்பு
ADDED : செப் 15, 2024 02:35 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் தொல்லியல் அலுவலகம் அருகே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்கீழ், மரகத பூங்கா வளாகம் உள்ளது. இந்த பூங்கா, 2009ல் அமைக்கப்பட்டது.
ஆனால், பயணியருக்கு பயனின்றி வீணாகி சீரழிந்தது. பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், 2019ல் சந்தித்தபோது, பூங்காவில் அலங்கார செடிகள் வளர்த்து, புதிய புல்வெளி அமைத்து, 30 லட்சம் ரூபாயில் மேம்படுத்தப் பட்டது.
பயணியரை அனுமதிக்காமல், ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு மட்டும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தனியார் நிறுவன பங்களிப்பில், 8 கோடி ரூபாயில், இவ்வளாகத்தில் ஒளிரும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை துவக்க, ஐந்து ஆண்டுகளுக்கு முன் வளர்த்த அலங்கார செடிகள், புல்வெளி ஆகியவை அழிக்கப்படுகிறது.