ADDED : ஜூலை 12, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.
இணை பதிவாளர்வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள்,ஓய்வுபெற்ற ஊழியர்கள், பணி தொடர்பாகவும், பணியின்போதும் ஏற்படும்குறைகளை தெரிவிக்கவும், அவற்றை விதிகளுக்கு உட்பட்டு தீர்க்கவும், சட்டசபையில் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
குறைதீர் முதல் கூட்டம், இன்று காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாக இணை பதிவாளர் கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது. குறைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.