/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டம் 497 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டம் 497 மனுக்கள் ஏற்பு
ADDED : பிப் 24, 2025 11:26 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 497 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
உதவி ஆணையர் கலால் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, இருளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு, கலைஞர் கனவு இல்லம், சாலை, குடிநீர் வசதி மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், சுய தொழில் துவங்க கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 497 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.