/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நாளை குறைதீர்க்கும் கூட்டம்
/
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நாளை குறைதீர்க்கும் கூட்டம்
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நாளை குறைதீர்க்கும் கூட்டம்
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நாளை குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : மார் 12, 2025 06:54 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மண்டல அளவில் பணியாற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு, நாளை குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் அறிக்கை:
கடந்த 2024 - 25ம் ஆண்டு கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர், சங்க பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்கள் பணி தொடர்பாகவும், பணியின் போது அல்லது வேறு வகையில் ஏற்படும் குறைகள் குறித்து தெரிவிக்கலாம்.
இந்த குறைகளுக்கு, விதிகளுக்கு உட்பட்டு தீர்வு செய்திடும் வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் பணியாளர்கள் நலன் கூட்டத்தில் தீர்வு காணப்படும்.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில், கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம், மண்டல இணை பதிவாளர், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் தலைமையில், வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் நடக்கிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.