sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஜி.எஸ்.டி., சாலையில் சீரமைப்பு பணி 4 கி.மீ.,க்கு கடும் போக்குவரத்து நெரிசல்

/

ஜி.எஸ்.டி., சாலையில் சீரமைப்பு பணி 4 கி.மீ.,க்கு கடும் போக்குவரத்து நெரிசல்

ஜி.எஸ்.டி., சாலையில் சீரமைப்பு பணி 4 கி.மீ.,க்கு கடும் போக்குவரத்து நெரிசல்

ஜி.எஸ்.டி., சாலையில் சீரமைப்பு பணி 4 கி.மீ.,க்கு கடும் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜூலை 12, 2024 01:23 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனுார் சுங்கச் சாவடி -- ஆத்துார் சுங்கச்சாவடி வரை, சாலையின் இரண்டு மார்க்கங்களிலும், பரனுார், மாமண்டூர்,படாளம் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் சாலை குண்டும் குழி யுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.

எனவே, இந்த பகுதி யில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதையடுத்து, மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே, புதிதாக சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக திருச்சி மார்க்கத்தில் பணிகள் நடக்கின்றன.

இதன் காரணமாக, சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இருங்குன்றம் பள்ளியில் இருந்து மாமண்டூர் வரை எதிர்திசையில் திருப்பி விடப்பட்டு உள்ளது. நேற்று மாலை ஜி.எஸ்.டி.,சாலையில் மாமண்டூரில் இருந்து பழவேலி வரை, 4 கி.மீ., துாரம் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

எனவே, சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us