/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஹேண்ட் பால்: பச்சையப்பன் கல்லுாரி வெற்றி
/
ஹேண்ட் பால்: பச்சையப்பன் கல்லுாரி வெற்றி
ADDED : செப் 01, 2024 03:39 AM

காஞ்சிபுரம் : சென்னை பல்கலைக்கழக மண்டல அளவில், கல்லுாரிகளுக்கு இடையே ஆடவர்களுக்கான 'ஹேண்ட் பால்' போட்டி, மதுராந்தகம் அக் ஷயா கலை கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது.
முதல் அரை இறுதியில், சென்னை மாநில கல்லுாரியுடன் மோதிய காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணி, 18 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு அரை இறுதியில் பெரி கலை கல்லுாரியுடன் மோதிய குருநானக் கல்லுாரி, 14 - 7 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இறுதி போட்டியில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணி, குருநானக் கல்லுாரி அணி மோதியது. இதில், 24 - 14 கோல் கணக்கில், பச்சையப்பன் கல்லுாரி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
மதுராந்தகம் அக் ஷயா கலை கல்லுாரி முதல்வர் முருகதாஸ், சாம்பியன் பட்டம் வென்ற காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரிக்கு வெற்றி கோப்பையை வழங்கினார்.