sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புறநகரில் சாரல் மழை

/

புறநகரில் சாரல் மழை

புறநகரில் சாரல் மழை

புறநகரில் சாரல் மழை


ADDED : மே 10, 2024 01:36 AM

Google News

ADDED : மே 10, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், புறநகர் பகுதிகளில், நேற்று காலை சாரல் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், புறநகர் பகுதிகளான தாம்பரம், மாடம்பாக்கம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின், சில நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. படப்பையில், 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீர் மழை பெய்து, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குன்றத்துார் சுற்றுபுறத்திலும் நேற்று கோடை மழை பெய்தது. குன்றத்துார் - --போரூர் நெடுஞ்சாலையிலும், மாங்காடு-- - முகலிவாக்கம் சாலையிலும் போதிய மழை நீர் வடிகால்வாய் இல்லாததால், சாதாரண மழைக்கே சாலையில் மழை நீர் தேங்கி நிற்றது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

அதேபோல், கூடுவாஞ்சேரி, திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுபுற கிராமங்களிலும், நேற்று காலை, அரைமணி நேரம் மழை பெய்து, வெப்பத்தை தணித்தது.






      Dinamalar
      Follow us