sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

900 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டம் மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவு

/

900 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டம் மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவு

900 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டம் மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவு

900 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டம் மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவு


ADDED : பிப் 27, 2025 11:43 PM

Google News

ADDED : பிப் 27, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், 900 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணியை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. மாவட்டத்தில், கிராமங்களில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் ஊராட்சி செயலர், சுகாதார ஊக்குனர் ஆகியோர் ஈடுபட்டனர்.

அவர்கள் கணக்கெடுப்பு செய்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதன் பின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகள் கணக்கெடுப்பை சரிபார்த்து, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தனர்.

கணக்கெடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 57,498 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில், 47,245 பயனாளிகள் வீட்டுமனை பட்டா வைத்துள்ளனர்.

நத்தம் வகைப்பாட்டில் 1,343 பேர் வீடு கட்டி வசித்து வருவது தெரிந்தது. இவர்களுக்கு, 'அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்' வாயிலாக வீடுகள் வழங்குவதற்கு, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர், கடந்தாண்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தில், 17 ஆயிரத்து 455 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

2024--25ம் ஆண்டிற்கு, 900 பயனானிகளுக்கு வீடுகள் கட்ட, 25.2 கோடி ரூபாய் நிதியை, மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்தன.

இத்திட்டத்தில், ஒரு வீடு கட்ட மத்திய அரசு, தமிழக அரசுகள் சார்பில் தலா 1.20 லட்சம் ரூபாய் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்கள் 90 நாள் வேலை செய்ய, 28 ஆயிரத்து 710 ரூபாய், துாய்மை பாரத இயக்க திட்டத்தில், கழிப்பறை கட்ட 12,000 ரூபாய் என, 2.80 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 900 பயனாளிகளுக்கு வீடு கட்ட, இணையதளம் வழியாக மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன் பின், 900 பயனாளிகளுக்கு பணி ஆணையை, கடந்த ஜன., மாதம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழங்கினர்.

மாவட்டத்தில், கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா ஆகியோர் வீடு கட்டும் பணியை ஆய்வு செய்ததில், 443 பயனாளிகள், வீடு கட்டும் பணிகளை துவக்காமல் இருந்தது தெரிந்தது.

அதன் பின், செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் ஊராட்சியில், பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணியை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று துவக்கி வைத்தார்.

இதில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, செயற்பொறியாளர் தணிகாசலம், உதவி திட்ட அலுவலர் பரணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். வீடு கட்டுவதற்கு பணி ஆணைகள் வழங்கியதில், 443 பயனாளிகள் வீடு பணியை துவக்காமல் இருந்தனர். இப்பணிகள் ஒரே நாளில் துவக்கப்பட்டு உள்ளன. வீடு கட்டும் பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

-அருண்ராஜ்,

மாவட்ட கலெக்டர், செங்கல்பட்டு.






      Dinamalar
      Follow us