/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இல்லீடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்
/
இல்லீடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்
ADDED : செப் 10, 2024 07:25 PM
செங்கல்பட்டு:இல்லீடு கிராமத்தில், மனுநீதி நாள் முகாம் இன்று நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து, செய்யூர் தாலுகா, செய்யூர் குறுவட்டத்தில் உள்ள இல்லீடு கிராமத்தில், மனுநீதி நாள் முகாம், இன்று 11ம் தேதி, புதன் கிழமை காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடக்கிறது.
இம்முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.