sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காஞ்சியில் 88 சவரன், ரூ.36 லட்சம் மீட்பு 80 வழக்குகளில் தொடர்புடையவர் கைது

/

காஞ்சியில் 88 சவரன், ரூ.36 லட்சம் மீட்பு 80 வழக்குகளில் தொடர்புடையவர் கைது

காஞ்சியில் 88 சவரன், ரூ.36 லட்சம் மீட்பு 80 வழக்குகளில் தொடர்புடையவர் கைது

காஞ்சியில் 88 சவரன், ரூ.36 லட்சம் மீட்பு 80 வழக்குகளில் தொடர்புடையவர் கைது


ADDED : மார் 26, 2024 11:22 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது வீட்டில், கடந்த பிப்.,16ம் தேதி, சுவர் ஏறி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

இதையடுத்து, அதே தெருவில், மஹாவீர் சந்த் என்பவர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது நகைக்கடை மற்றும் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர், மார்ச் 1ம் தேதி வீட்டிற்குள் புகுந்து, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 180 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றார்.

இதுகுறித்து, விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வந்தனர். காஞ்சிபுரம் நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரே நபர், இந்த இரு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்படி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், பாபுஜி காலனியைச் சேர்ந்த, கரி என்கிற சதீஷ்ரெட்டி, 40, என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன், சங்கர சுப்பிரமணியம், சித்ரா ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் ஆந்திரா சென்றனர்.

அங்கு பல நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சதீஷ்ரெட்டியை போலீசார் கைது செய்து, அவரிடம்இருந்து, 708 கிராம்தங்க நகைகள் மற்றும் கொள்ளையடித்த நகைகளை விற்றதில் கிடைத்த 36 லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் டி.எஸ்.பி., முரளி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ்ரெட்டி, ஆந்திரா, மஹாராஷ்டிரா, தமிழகம் என, பல்வேறு மாநிலங்களில் இவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இவர் மீது, 80 குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டவர். ஒரே நபராக இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொள்ளையடித்த நகைகளை விற்றதில் கிடைத்த பணம், 36 லட்ச ரூபாயையும் நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்.

இவர், புத்துாரில் மறைந்திருந்த போது நாங்கள் அவரை கைது செய்தோம்.

பொதுமக்கள் தேவைக்கு அதிகமான நகைகளை வீட்டில் வைப்பதை தவிர்த்து, வங்கி லாக்கரில் வைக்க லாம். பொதுமக்கள் வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us