/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
/
செங்கை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
ADDED : செப் 13, 2024 11:52 PM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்க்கெட், மகேந்திரா சிட்டி அருகில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை, விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து காரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும், எலுமிச்சை பழம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவையும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த காய்கறிகளை, புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில்லரை விற்பனை வியாபாரிகள் வாங்கி சென்று, தங்களின் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்து, சில நாட்களாக, காய்கறிகள் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்ட போது, ”வார இறுதி நாட்களில், அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால், காய்கறிகள் விலை உயர்நதுள்ளது,” என்றனர்.