sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரிப்பு சூணாம்பேடில் தொற்றுநோய் அபாயம்

/

கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரிப்பு சூணாம்பேடில் தொற்றுநோய் அபாயம்

கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரிப்பு சூணாம்பேடில் தொற்றுநோய் அபாயம்

கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரிப்பு சூணாம்பேடில் தொற்றுநோய் அபாயம்


ADDED : ஜூன் 17, 2024 03:19 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்: சூணாம்பேடு பஜார் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி, துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் நிலையில் இருந்தது.

மேலும், மழை நீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி, அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், முத்தாலம்மன் கோவில் தெருவில், இரண்டு ஓரங்களிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதிவாசிகள் மழைநீர் வடிகால்வாயை கழிவுநீர் கால்வாயாக பயன்படுத்தி வருகின்றனர்.

கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, குடியிருப்புப் பகுதியில் கொசு மருந்து அடிக்க, அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், கொசு மருந்து அடிக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வாரம் ஒரு முறை, குடியிருப்புப் பகுதியில் கொசு மருந்து அடிக்கவும், கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் அகற்றவும், திறந்த நிலையில் உள்ள கால்வாய்க்கு மூடி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us