/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய அலுவலர்கள் பெயர்கள் இடம்பெற்ற தகவல் பலகை
/
புதிய அலுவலர்கள் பெயர்கள் இடம்பெற்ற தகவல் பலகை
ADDED : ஜூலை 06, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக, கடந்த ஜன., முதல் அருண்ராஜ் பதவி வகித்து வருகிறார். மாவட்ட வருவாய் அலுவலராக, கடந்த ஓராண்டாக சுபாநந்தினி உள்ளார்.
இந்நிலையில், திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு நலத்திட்ட சேவைகள் குறித்த தகவல் பலகைகளில், புதியவர்களின் பெயர் இடம்பெறாமல், முந்தைய அலுவலர்களின் பெயர்களே, தற்போதும் தொடர்ந்தன. முகப்பில் பெயர்ப்பலகையும் இல்லை.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பழைய பெயர்கள் நீக்கப்பட்டு, தற்போது புதிய அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.