sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பாலாபிஷேகம் துவக்கம்

/

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பாலாபிஷேகம் துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பாலாபிஷேகம் துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பாலாபிஷேகம் துவக்கம்


ADDED : ஆக 07, 2024 02:29 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்,

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 53வது ஆடிப்பூர பெருவிழா, நேற்று துவங்கியது. அதில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள், பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு, 53வது ஆடிப்பூர பெருவிழா, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், கலசவிளக்கு வேள்வி பூஜையுடன், நேற்று முன்தினம் துவங்கியது.

தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கல இசையுடன் மேலதாளங்கள் ஒலிக்க, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பங்காரு அடிகளார் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜையும், சுயம்பு அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் நடந்தது.

இதில், செவ்வாடை பக்தர்கள், கஞ்சி கலயம் எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர். அதன்பின், சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இன்று வரை பாலாபிஷேகம் நடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமிபங்காரு அடிகளார் தலைமையில், கோயம்புத்துார், திருப்போரூர் மாவட்டங்களின் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி சதாசிவம் உள்ளிட்டோர்செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us