sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

/

ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு


ADDED : மே 15, 2024 11:01 PM

Google News

ADDED : மே 15, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில், ஓட்டு எண்ணும் மையத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், நேற்று ஆய்வு செய்தார்.

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொதிகளுக்கு தரைதளத்திலும், மதுரவாயல், அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு இரண்டாம் தளத்திலும், ஓட்டு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்த மையத்தில், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான, 12 ஸ்டராங்க் ரூம்களில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரம் ஆகியவை வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டன.

அவை, கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இங்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில், வருவாய்த்துறை, எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணும் மையத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், நேற்று ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us