sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு பள்ளிகளை மேம்படுத்த கல்வி குழுவினருக்கு உத்தரவு

/

அரசு பள்ளிகளை மேம்படுத்த கல்வி குழுவினருக்கு உத்தரவு

அரசு பள்ளிகளை மேம்படுத்த கல்வி குழுவினருக்கு உத்தரவு

அரசு பள்ளிகளை மேம்படுத்த கல்வி குழுவினருக்கு உத்தரவு


ADDED : ஜூலை 05, 2024 08:51 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கடந்த 2ம் தேதி நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, கூடுதல் கண்காணிப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில், பள்ளி கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலன், காவல் உள்ளிட்ட14 துறைகளைச் சேர்ந்த 24 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவினர், அரசு பள்ளிகளை மேம்படுத்துவது குறித்தான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இந்த கூட்டத்தில், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:

அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்துவசதிகளையும், கண்காணிப்பு குழுவினர் செயல்படுத்த வேண்டும்.போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு, அறிவுசார் மையத்தில் கணினி வசதி, தேர்வுக்கானஅனைத்து புத்தகங்களும் உள்ளன. இந்த வசதிகளை,போட்டித் தேர்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர் கல்வி படிக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளைமேம்படுத்த, அனைவரும் முன்வர வேண்டும். கல்வியில் தமிழகத்திலேயே முன்மாதிரியான மாவட்டமாக கொண்டு வர, கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

செங்கல்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் பேசியதாவது:

பள்ளிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவித்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, அது தடுக்கப்படும்.

குழந்தை திருமணங்கள், மாணவியர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டால், காவல் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்பேசினார்.






      Dinamalar
      Follow us