sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வட்ட செயலரை மிரட்டிய போதை சிறுவன் கைது

/

வட்ட செயலரை மிரட்டிய போதை சிறுவன் கைது

வட்ட செயலரை மிரட்டிய போதை சிறுவன் கைது

வட்ட செயலரை மிரட்டிய போதை சிறுவன் கைது


ADDED : ஜூன் 03, 2024 06:10 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை ; சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவைச் சேர்ந்தவர் ஜாவித், 54; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, 48வது வட்டச் செயலர்.

நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டின் எதிரே நின்றிருந்த ஆட்டோவில், இருவர் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அவர்களை, ஜாவித் கண்டித்து உள்ளார்.

ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லாமல், அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, 'போலீசில் புகார் அளிப்பேன்' என ஜாவித் கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள், 'போலீஸ் எங்களை கைது செய்தால், 15 நாட்களில் வெளியே வந்து விடுவோம். வெளியே வந்து உங்களையும், குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டி விடுவோம்' என, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கொருக்குப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்த, 17 வயது சிறுவனை, நேற்று கைது செய்தனர்.

மற்றொருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us