/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'அக்னி வீர்' வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
'அக்னி வீர்' வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 28, 2024 11:11 PM
செங்கல்பட்டு:இந்திய ராணுவத்தில்அக்னிவீர் வாயு பிரிவில் இசைக்கலைஞர்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவத்தில், 'அக்னி வீர்' வாயு பிரிவில், இசை கலைஞர்பணிக்கான தேர்வுக்கு பெங்களூருவில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தின் வாயிலாக, வரும் ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை, ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க, மே 22ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை, https:agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப் பமும் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.