ADDED : ஜூலை 13, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,:தாம்பரம் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் சிறப்பு குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இதில், 75 பேர் பங்கேற்று மனு அளித்தனர்.
அவர்களுக்கு மருத்துவர்கள், அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, 32 பேருக்கு அடையாள அட்டை, 42 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, தாம்பரம் தாசில்தார் வாசுதேவன் ஆகியோர் வழங்கினர்.