sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடற்கரைக்கு ரோந்து வாகனம் கானத்துார் போலீசார் எதிர்பார்ப்பு

/

கடற்கரைக்கு ரோந்து வாகனம் கானத்துார் போலீசார் எதிர்பார்ப்பு

கடற்கரைக்கு ரோந்து வாகனம் கானத்துார் போலீசார் எதிர்பார்ப்பு

கடற்கரைக்கு ரோந்து வாகனம் கானத்துார் போலீசார் எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 07, 2024 01:50 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துார்:கானத்துார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கரை சந்திப்பில் இருந்து முட்டுக்காடு வரை, கடற்கரை முடியும் வகையில், 25க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

இதில், 15க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள கடற்கரை பகுதியை, ஆபத்தான, ஆழமான, குளிக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக,காவல் துறை அறிவித்துள்ளது.

எனினும், ஓராண்டில், நீலாங்கரை, கானத்துார் காவல் நிலைய எல்லையில், 15க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகி உள்ளனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்.

போலீசார், அனைத்து தெருக்களில் ரோந்து பணியில் இருந்தாலும்,அவர்கள் அங்கிருந்து சென்றதும், ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளிப்போர்அதிகரித்து வருகின்றனர்.

இரவில் செல்லும் காதலர்கள், தம்பதியரிடம் வழிப்பறி, பார்ட்டி என்ற பெயரில் மது அருந்தி, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடும் சம்பவமும் நடக்கிறது. இதனால், இந்த பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

மெரினா கடற்கரைக்கு வழங்கியதுபோல், சமபரப்பு, சகதி, மணலில் செல்லக்கூடிய ரோந்து வாகனம் வழங்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us