sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பணியாளர்களின்றி செயல்படும் கண்ணகப்பட்டு மின் நிலையம் சுழற்சி முறை ஊழியர்களுக்கு பணிச்சுமை

/

பணியாளர்களின்றி செயல்படும் கண்ணகப்பட்டு மின் நிலையம் சுழற்சி முறை ஊழியர்களுக்கு பணிச்சுமை

பணியாளர்களின்றி செயல்படும் கண்ணகப்பட்டு மின் நிலையம் சுழற்சி முறை ஊழியர்களுக்கு பணிச்சுமை

பணியாளர்களின்றி செயல்படும் கண்ணகப்பட்டு மின் நிலையம் சுழற்சி முறை ஊழியர்களுக்கு பணிச்சுமை


ADDED : ஆக 29, 2024 01:56 AM

Google News

ADDED : ஆக 29, 2024 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்படாததால், மின் வாரிய ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.

திருப்போரூர் ஒன்றியத்தில் நிலவும் மின் அழுத்த பிரச்னைகள், மின்சாரம் வீணாவதை தடுக்க, புதிய துணை மின் நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு பகுதியில், 110 கே.வி., திறனுள்ள துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் முடிந்து, கடந்த 2019ல் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை பராமரிக்க, ஒரு உதவிப் பொறியாளர் உட்பட, அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், இத்துணை மின் நிலையத்தில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. அதனால், அங்குள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, திருப்போரூர், ஆலத்துார், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இவ்வாறு, மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து, ஓரிரு ஊழியர்கள் சுழற்சி முறையில் துணை மின் நிலைய பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஏற்கனவே, மேற்கண்ட மின் நிலைய பகுதியில் ஆள் பற்றாக்குறையால் மின் வாரியத்தில் உள்ள வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஊழியர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக்கிறது.

இந்நிலையில், புதிய துணை மின் நிலைய பணிகளுக்கும் அவர்களையே அனுப்புவது, மின் வாரிய பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, கண்ணகப்பட்டு புதிய துணை மின் நிலையத்திற்கு, நிரந்தர பணியாளர்களை நியமிக்க, மின் வாரிய தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us