sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாநகராட்சியின் ஒப்பந்த குளறுபடியால் காரப்பாக்கம் சாலை பணி பாதியில் நிறுத்தம்

/

மாநகராட்சியின் ஒப்பந்த குளறுபடியால் காரப்பாக்கம் சாலை பணி பாதியில் நிறுத்தம்

மாநகராட்சியின் ஒப்பந்த குளறுபடியால் காரப்பாக்கம் சாலை பணி பாதியில் நிறுத்தம்

மாநகராட்சியின் ஒப்பந்த குளறுபடியால் காரப்பாக்கம் சாலை பணி பாதியில் நிறுத்தம்


ADDED : மே 06, 2024 12:05 AM

Google News

ADDED : மே 06, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார் : சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, காரப்பாக்கம், சப்தகிரி நகர், நேரு தெருவில் நான்கு தெருக்கள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

மொத்தம் 30 அடி அகலம் உடைய இந்த தெருக்கள் வழியாக, 600க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் செல்கின்றனர்.

இங்குள்ள சாலைகளை புதுப்பிக்க, 50 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஒதுக்கியது. நான்கு மாதங்களுக்கு முன் பணி துவங்கி, பழைய சாலை சுரண்டி எடுக்கப்பட்டது. மழைக்காலத்தில் வெள்ளம் சூழும் பகுதி என்பதால், ஒரு அடிக்கு ஜல்லிக்கற்கள் கொட்டி உயர்த்தி, தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிக்கு, ஒரே ஒப்பந்ததாரர் நியமிப்பது வழக்கம்.

ஆனால், ஜல்லி கொட்டி உயர்த்த ஒரு ஒப்பந்த நிறுவனத்தையும், தார் சாலை போட மற்றொரு நிறுவனத்தையும், மாநகராட்சி நியமித்தது.

ஜல்லி கொட்டிய நிறுவனம், சாலை மட்டத்தை உயர்த்தாமல் நான்கு மாதமாக அப்பணியை கிடப்பில் போட்டுள்ளது.

இதனால், சுரண்டிய சாலையில், கால் அடி உயரத்தில் ஜல்லி கொட்டி அப்படியே விட்டதால், வாகனங்கள் பழுதடைகின்றன. நடந்து செல்லும், குழந்தைகள், முதியவர்கள் மிவுகம் சிரமப்படுகின்றனர்.

ஒப்பந்த நிறுவனத்திற்கும், மாநகராட்சிக்கும் இடையே ஏற்பட்டநிர்வாக குளறுபடியால், பணியை பாதியில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி உயர் அதிகாரிகள் தலையிட்டு, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us