sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பஜனை கோவிலில் உறியடி மாமல்லையில் கோலாகலம்

/

பஜனை கோவிலில் உறியடி மாமல்லையில் கோலாகலம்

பஜனை கோவிலில் உறியடி மாமல்லையில் கோலாகலம்

பஜனை கோவிலில் உறியடி மாமல்லையில் கோலாகலம்


ADDED : செப் 08, 2024 12:25 AM

Google News

ADDED : செப் 08, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ருக்மணி, பாமா சமேத நவநீத கிருஷ்ண சுவாமி கோவில், பஜனை கோவில் என, பிரசித்தி பெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 38ம் ஆண்டு உற்சவம் கொண்டாடப்பட்டது.

கடந்த ஆக., 26ம் தேதி நவநீத கிருஷ்ணர், சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சன வழிபாடு கண்டு, வாசுதேவர் ஆயர்பாடியில் எழுந்தருளிய திருக்கோல காட்சியுடன் உற்சவம் துவக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, செப்., 5ம் தேதி வரை, தினசரி காலை அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. மாலை, தினமும் ஒரு திருக்கோல அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இறுதி நாளான நேற்று முன்தினம் காலை சுவாமி திருமஞ்சனம் கண்டார். மாலை, உறியடி கண்ணன் திருக்கோல கிருஷ்ணர் வீதியுலா சென்றார். இரவு பக்தர்கள் உறியடித்தனர்.






      Dinamalar
      Follow us