sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூடுவாஞ்சேரி ஏரி சீரமைப்பு: ரூ.7 கோடியும் வீண்; ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் கண்டிப்பு

/

கூடுவாஞ்சேரி ஏரி சீரமைப்பு: ரூ.7 கோடியும் வீண்; ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் கண்டிப்பு

கூடுவாஞ்சேரி ஏரி சீரமைப்பு: ரூ.7 கோடியும் வீண்; ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் கண்டிப்பு

கூடுவாஞ்சேரி ஏரி சீரமைப்பு: ரூ.7 கோடியும் வீண்; ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் கண்டிப்பு


ADDED : ஜூலை 31, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள ஏரியை துார் வாருதல் மற்றும் ஏரியின் கரையை பலப்படுத்தி, நடைபாதைகள் மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மாவட்ட நிர்வாகம் சார்பில், நபார்டு வங்கி உதவியுடன், 6.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியை, பொதுப்பணித்துறை வாயிலாக, ஒப்பந்ததாரர் செய்து வந்தார்.

நிர்வாகத்திற்கு புகார்


இந்நிலையில், கடந்த மாதம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டதாக, ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார். ஆனால், பணிகள் நிறைவு பெறவில்லை என்றும், செய்துள்ள பணிக்கு இவ்வளவு தொகை செலவாகியிருக்க வாய்ப்பில்லை என்றும், அப்பகுதி சமூக நல ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், நேற்று மாலை 4:30 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், ஏரியில் செய்யப்பட்டுள்ள பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா, பொதுப்பணித்துறை அதிகாரி குஜராஜ், நகராட்சி கமிஷனர் தாமோதரன், நகராட்சி தலைவர் கார்த்திக் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

அப்போது, ஏரியில் செய்யப்பட்டுள்ள எந்த பணியும் முடிவுறவில்லை என்றும், பணிகளின் தரம் சரியில்லை என்றும், கலெக்டர் அருண்ராஜ், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரைகடுமையாக கண்டித்தார்.

சிமென்ட் கல்


அதன்பின், கலெக்டர் அருண்ராஜ் கூறியதாவது:

சிட்லபாக்கம் ஏரி, இதை விட குறைவான நிதியில் சிறப்பாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு, ஏரிக்கு 6.60 கோடி ரூபாயும் வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏரியின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிமென்ட் கல் பெயர்ந்துள்ளது.

அதன் வழியாக, நீர் வெளியேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பணிகளில் திருப்தி இல்லை. இது குறித்து கலந்து ஆலோசித்து, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியை நகராட்சி கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், சிட்லபாக்கம் ஏரியை போல், இந்த ஏரியையும் சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us