sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

/

காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : செப் 09, 2024 06:28 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமத்தில், மலையின் மீது, 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

அதை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி கணபதி, நவக்கிரக ஹோமங்கள், கோ பூஜை நடந்தது. அன்று மாலைஇ முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின.

நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால மற்றும் மூன்றால் கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகளும் பூர்ணாஹுதி தீபாராதனையும் நடந்தன.

காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோவிலை வலம் வந்தது. கால பைரவர், விநாயகர் சுவாமிகளின் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலுடன் அன்னதானம் நடைபெற்றது.

விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us