sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இச்சைக்கு மறுத்த அத்தை கொலை உறவினருக்கு ஆயுள் தண்டனை

/

இச்சைக்கு மறுத்த அத்தை கொலை உறவினருக்கு ஆயுள் தண்டனை

இச்சைக்கு மறுத்த அத்தை கொலை உறவினருக்கு ஆயுள் தண்டனை

இச்சைக்கு மறுத்த அத்தை கொலை உறவினருக்கு ஆயுள் தண்டனை


ADDED : ஜூன் 25, 2024 05:36 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : சென்னை குரோம்பேட்டை, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐ.டி., நிறுவன ஊழியர். அவரது மனைவிகிருஷ்ணவேணி, 35.

இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். கணவரின் உறவினர், சென்னை எழும்பூரைச் சேர்ந்த அருண்குமார், 32. ஐ.டி., நிறுவன ஊழியர்.

கடந்த 2016, ஜூன் 14ம் தேதி, அத்தை முறை உறவினரான கிருஷ்ணவேணி, வீட்டில் தனியாக இருந்தபோது, பாலியல் இச்சைக்கு இணங்குமாறு, அருண்குமார் வற்புறுத்தியுள்ளார். கிருஷ்ணவேணி மறுக்கவே, அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இந்த வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில், வக்கீல் சசிரேகா வாதிட்டார்.

நேற்று நடந்த விசாரணையில், அருண்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து, நீதிபதி தமிழரசி, அவருக்கு ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us